Sunday, February 14, 2010
முஸ்லிம் சமூகத்தை கூறு போடும் மற்றொரு முயற்சி
நேற்று மாலை சாய்ந்தமருது பிரதான வீதியில் ஒரு புதிய அரசியல் கட்சி மக்கள் மத்தியில் பரிணாமம் எடுத்தது. பொது தேர்தல் அண்மிக்கும் இக்காலத்தில் இவ்வாறான சுய லாபங்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை மேலும் மேலும் பிளவு பட செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும், தேவைகளையும் அதன் அரசியல் அபிலாசைகளையும் வெற்றி கொள்வதற்கு முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமை படுத்தும் முயற்சிகளை விடுத்துவிட்டு அதனை கூறு போட நினைக்கும் எந்தவொரு சமூக விரோத சக்தியையும் முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய ஒரு பொறுப்பு இந்த இளைஞர் சமூதாயத்திற்கு உரியதாகும்.