Monday, February 22, 2010

உணவின் உன்மையான உயா; தரத்தை உறுதிப் படுத்தும் முறையே ஹலால் - ஜம்இய்யத்துல் உலமா

ஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியானஇ முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றிதழ் என்று ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அளிக்கும்; போதே ஜம்இய்யத்துல் உலமா பிரமுகர்கள்; இதனை தெரிவித்தனர்.

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சரான பைஸர் முஸ்தபா
இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு; ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.

ஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தன.

சைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழு ப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றிதழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான்றிதழை வழங்கி வருகிறது.

http://www.muslimguardian.com/